follow the truth

follow the truth

May, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாமுன்னாள் ஜனாதிபதியின் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதியின் விளக்கம்

Published on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 19 வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதாக வெளியான செய்திகள் பொய்யானவை என அவரது தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எந்தவொரு வாகனத்தையும் தவறாக பயன்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ கார் தேசிய நிகழ்வுகளின் போது தவிர வேறு எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தப்படவில்லை.

ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வாகனங்கள் ஒதுக்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினருக்கு வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரத்தியேக செயலாளர் சுதீஸ்வர பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போதும் தனது தனிப்பட்ட காரை மாத்திரமே பயன்படுத்துகின்றார்.

முன்னாள் ஜனாதிபதியின் உணவு மற்றும் பானங்களுக்காக அரசாங்கம் 950,000 ரூபாவை செலுத்துவதாக வெளியான செய்திகளும் பொய்யானவை என பிரத்தியேக செயலாளர் சுதீஸ்வர பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

இணைப்புச் செய்தி
தப்பியோடிய கோட்டாவுக்கு அரசாங்கத்தினால் 19 வாகனங்கள்

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...