follow the truth

follow the truth

July, 4, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமுன்னாள் ஜனாதிபதியின் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதியின் விளக்கம்

Published on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 19 வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதாக வெளியான செய்திகள் பொய்யானவை என அவரது தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எந்தவொரு வாகனத்தையும் தவறாக பயன்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ கார் தேசிய நிகழ்வுகளின் போது தவிர வேறு எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தப்படவில்லை.

ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வாகனங்கள் ஒதுக்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினருக்கு வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரத்தியேக செயலாளர் சுதீஸ்வர பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போதும் தனது தனிப்பட்ட காரை மாத்திரமே பயன்படுத்துகின்றார்.

முன்னாள் ஜனாதிபதியின் உணவு மற்றும் பானங்களுக்காக அரசாங்கம் 950,000 ரூபாவை செலுத்துவதாக வெளியான செய்திகளும் பொய்யானவை என பிரத்தியேக செயலாளர் சுதீஸ்வர பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

இணைப்புச் செய்தி
தப்பியோடிய கோட்டாவுக்கு அரசாங்கத்தினால் 19 வாகனங்கள்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை - நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும் அபாயம் – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை தற்போதைய...

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது....

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...