2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (07) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில், அரசாங்கத்தின் முழு செலவீனமானது 2,505.3 பில்லியன் ரூபாவாகவும், அதில் 1,776 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகையினை அரசாங்கம் புனரமைப்புக்காக செலவிடவுள்ளது.
இந்த வருடத்திற்கான செலவீனமான 2,538 பில்லியன் ரூபாவை காட்டிலும் அடுத்த வருடத்தின் செலவீனமானது 33 பில்லியன் ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
பொதுச் சேவைகளுக்காக 12.6 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளது.