follow the truth

follow the truth

July, 19, 2025
Homeஉள்நாடுஉகண்டா பணம் தொடர்பில் நாமலின் சர்ச்சைக்குரிய கருத்து

உகண்டா பணம் தொடர்பில் நாமலின் சர்ச்சைக்குரிய கருத்து

Published on

தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முறைகேடாகச் சம்பாதித்த சொத்துக்கள் குறித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் குறித்த சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சத்தியக் கடதாசிகள் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு நல்லாட்சி அரசாங்கம் வந்தது அதில் அநுர குமாரவும் இருந்தார், சஜித் பிரேமதாசவும் இருந்தார், அதில் எங்கள் ஜனாதிபதியும் இருந்தார்.

எங்கள் கணக்குகளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் சென்றார்கள். ரஞ்சன் ராமநாயக்க டுபாய் மேரியட் ஹோட்டலுக்குச் சென்று, இது நாமலின் ஹோட்டல் என்றார்.

ராஜபக்சவிடம் இவ்வாறான சர்வதேச கணக்குகள் இருப்பதாக எங்கும் உறுதிப்படுத்தப்படவில்லை என தற்போதைய ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அன்று சொன்ன பொய்யை இன்றும் அதே போன்று மீண்டும் கூறுகின்றனர். கோப்புகளை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கோப்புகளின் மூட்டைகளை மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. தங்களிடம் ஆதாரம் இருந்தால், அதை நிரூபியுங்கள், என் பெயரில் அல்லது நம் குடும்பத்தில் யாரேனும் பெயரில் பத்திரம் இருந்தால், உலக நாடுகளில் உள்ள கோப்புகளை மறைத்து கொண்டு வர வேண்டாம்.

சத்தியப்பிரமாணப் பத்திரத்தில் எழுதுவோம். உகண்டாவுக்கு பணம் அனுப்பினார்.. அப்பட்டமான பொய். அதிகாரத்தைப் பெறுவதற்காக பொய் சொல்கிறார்கள். பொய் சொல்ல ஒன்றுமில்லை. அவ்வாறான காரணிகள் இருந்தால் அவற்றை அரசாங்கத்திடமும் நாட்டிடமும் ஒப்படைக்க நாம் தயாராக உள்ளோம்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி நேற்று(17)...

வலுசக்தி அலுவல்கள் பற்றிய உப குழு நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா...

ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்...