follow the truth

follow the truth

July, 18, 2025
Homeஉள்நாடுஜோன்ஸ்டனுக்கு எதிரான இலஞ்ச வழக்கு விசாரணைக்கு

ஜோன்ஸ்டனுக்கு எதிரான இலஞ்ச வழக்கு விசாரணைக்கு

Published on

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச வழக்கை இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் சட்டத்தின் பிரகாரம் விசாரணைக்கு தேவையான மூன்று ஆணையாளர்களினதும் சிபாரிசு பெறப்படவில்லை என்ற பிரதிவாதிகளின் ஆரம்ப ஆட்சேபனையை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, வழக்கு விசாரணை மே 10 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.

2014 ஆம் ஆண்டு, இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் ஊழியர் குழுவை ஈடுபடுத்தி ஊழல் குற்றத்தை செய்தமைக்காக, அப்போது வர்த்தக அமைச்சராக இருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் தலைவராக இருந்த எராஜ் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சதொச நிறுவனம் தமது உத்தியோகபூர்வ கடமைகளுக்குப் புறம்பாக தனியார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமையால் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி நேற்று(17)...

வலுசக்தி அலுவல்கள் பற்றிய உப குழு நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா...

ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்...