follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த மனு தொடர்பான உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த மனு தொடர்பான உத்தரவு

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதி வழங்காததன் மூலம், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் பரிசீலிக்குமாறு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எஸ் துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற குழு முன்னிலையில் இந்த மனு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...