follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடு"சஜித் பகிர்வது மக்களுக்காகவே அன்றி, குடும்பத்திற்காக அல்ல"

“சஜித் பகிர்வது மக்களுக்காகவே அன்றி, குடும்பத்திற்காக அல்ல”

Published on

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ‘பகிர்ந்தளிக்க மட்டுமே’ தெரியுமென இந்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சிலரே நாடு முழுவதும் கூறிக் கூறித் திரிவதாகவும்,சஜித் பிரேமதாஸ நாட்டின் 220 இலட்சம் மக்களுக்காக பகிர்ந்தளிக்கிறாரே தவிர தனது நண்பர்களுக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ அல்ல என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வெலிஓயாவில் தெரிவித்தார்.

மக்களுக்காக எதுவும் செய்யாது தம்பட்டம் அடிப்பவர்கள் எதையுமே செய்ய நினைப்பதில்லை எனவும்,பொய்யான பாசாங்குளைப் பேசி மக்களை ஏமாற்றி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பேருந்துகளில் தங்கள் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் ஸ்டிக்கர்களாக ஒட்டி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டாலும், 42 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு பேருந்தையேனும் வழங்க அவர்களால் முடியவில்லை எனவும், ஆனாலும்,பாடசாலை மாணவர்களுக்கு தான் பேருந்து வழங்கும்போது, ​​’பஸ் மேன்’ என்று தன்னை விமர்சிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தாலும் மக்களுக்கான சேவை நிறுத்தப்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...