எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ‘பகிர்ந்தளிக்க மட்டுமே’ தெரியுமென இந்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சிலரே நாடு முழுவதும் கூறிக் கூறித் திரிவதாகவும்,சஜித் பிரேமதாஸ நாட்டின் 220 இலட்சம் மக்களுக்காக பகிர்ந்தளிக்கிறாரே தவிர தனது நண்பர்களுக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ அல்ல என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வெலிஓயாவில் தெரிவித்தார்.
மக்களுக்காக எதுவும் செய்யாது தம்பட்டம் அடிப்பவர்கள் எதையுமே செய்ய நினைப்பதில்லை எனவும்,பொய்யான பாசாங்குளைப் பேசி மக்களை ஏமாற்றி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பேருந்துகளில் தங்கள் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் ஸ்டிக்கர்களாக ஒட்டி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டாலும், 42 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு பேருந்தையேனும் வழங்க அவர்களால் முடியவில்லை எனவும், ஆனாலும்,பாடசாலை மாணவர்களுக்கு தான் பேருந்து வழங்கும்போது, ’பஸ் மேன்’ என்று தன்னை விமர்சிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தாலும் மக்களுக்கான சேவை நிறுத்தப்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.