follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு பரீட்சை ஒத்திவைப்பு

ஆசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு பரீட்சை ஒத்திவைப்பு

Published on

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச பட்டதாரிகளை இலங்கையின் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக நாளை நடைபெறவிருந்த போட்டிப் பரீட்சை அன்றைய தினம் நடைபெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பரீட்சை திகதி அறிவிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணை இன்றுடன் நிறைவடைகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை எதிர்வரும் திங்கட்கிழமை 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 கல்வியாண்டின் மூன்றாம் பாடசாலை தவணை கடந்த டிசம்பர் 5ஆம் திகதி முதல் 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு ஏப்ரல் 5ம் திகதி முதல் 16ம் திகதி வரை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

CID யில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு...

ஜூலை 22 முதல் பாராளுமன்றம் கூடவுள்ளது

ஜூலை 22 ஆம் திகதி முதல் 25 வரை கூடவிருக்கும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள தினப்பணிகள் சபாநாயகர்...

2030 இல் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி பணிப்புரை

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை (IRD) பலப்படுத்தல்...