இன்று (07) இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் புகையிரதத்தை இரத்து செய்ய வேண்டியுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
அக்போபுரவில் ரயில் தடம் புரண்டதே இதற்குக் காரணம்.
கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலைக்கும் திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் புகையிரதங்களே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.