தேசிய மக்கள் அமைப்பினால் நாளை (21) நீர்கொழும்பு செல்லந்துவ சந்திக்கு அருகில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) நிராகரித்துள்ளது.
போராட்டத்திற்கு பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்தல் வழங்கப்படவில்லை எனவும் அனுமதி பெறப்படவில்லை எனவும் பொலிஸார் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.
எனினும், அந்த கோரிக்கையை நிராகரித்த நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க டி சில்வா, அவ்வாறானதொரு உத்தரவை பிறப்பிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவித்தார்.