தமது பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பில் இன்று (20) நடைபெற்ற கூட்டத்தின் போது, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வரித்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
வரி செலுத்துவதற்கு தாம் தயாராக உள்ள போதிலும் அரசாங்கத்தின் வரித்திருத்தம் ஏற்புடையதாக இல்லை என தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
வரித்திருத்தம் தொடர்பான இடைக்கால தீர்வு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையிலேயே பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தினர் உயர் தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகளிலிருந்து விலகியுள்ளனர்.