follow the truth

follow the truth

June, 6, 2025
Homeஉள்நாடுவரி செலுத்த தாம் தயார் - ஆனாலும் அரச வரித்திருத்தம் ஏற்புடையதாக இல்லை

வரி செலுத்த தாம் தயார் – ஆனாலும் அரச வரித்திருத்தம் ஏற்புடையதாக இல்லை

Published on

தமது பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை என தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பில் இன்று (20) நடைபெற்ற கூட்டத்தின் போது, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வரித்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

வரி செலுத்துவதற்கு தாம் தயாராக உள்ள போதிலும் அரசாங்கத்தின் வரித்திருத்தம் ஏற்புடையதாக இல்லை என தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

வரித்திருத்தம் தொடர்பான இடைக்கால தீர்வு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையிலேயே பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தினர் உயர் தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகளிலிருந்து விலகியுள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உப்பின் விலையை தன்னிச்சையாக அதிகரித்தால் கட்டுப்பாட்டு விலை கொண்டுவரப்படும்

கூட்டுறவு வங்கி கட்டமைப்பு உள்ளிட்ட கூட்டுறவுத் துறைய நெறிமுறைப்படுத்துவதற்குப் புதிய சட்டங்களை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என...

திட்டமிட்ட உரிய காலத்திற்குள் வேலைத்திட்டங்களை நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால்...

தயாசிறி ஜயசேகர இன்றும் CIDயில் முன்னிலை

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்றும்(06) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இலங்கை சுங்கத்திடம் இருந்து 323 கொள்கலன்கள் சோதனையின்றி...