follow the truth

follow the truth

June, 7, 2024
HomeTOP213ஆவது திருத்தம் - தேர்தல் குறித்து இந்தியாவிடமிருந்து அறிவிப்பு

13ஆவது திருத்தம் – தேர்தல் குறித்து இந்தியாவிடமிருந்து அறிவிப்பு

Published on

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் , மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியா தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்குமிடையில் நேற்று(28) இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இதன் போது புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதோடு , இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் அது தொடர்பான விடயங்களில் முன்னேற்றம் குறித்து உயர்ஸ்தானிகரிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமளித்தனர்.

மேலும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ரணிலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் அணி ஆதரவு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் எவ்வித ஆட்சேபனையும் இல்லை...

வெள்ளத்தால் இறந்தவர்களுக்கு இரண்டரை இலட்சம் இழப்பீடு

சீரற்ற காலநிலை காரணமாக விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா நட்டஈடாக வழங்கப்படும் என அனர்த்த...

வீடியோ பார்க்க கைப்பேசியை கொடுக்க மறுத்ததால் கத்தியால் குத்து

அங்குனுகொலபலஸ்ஸ வேடிய பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய மாணவன் ஒருவன் அயல் வீட்டில் இருந்த 8 வயது குழந்தையை...