follow the truth

follow the truth

June, 16, 2025
Homeஉள்நாடுஅரசாங்கத்தால் மட்டுமே பணத்தை உருவாக்க முடியாது - மனிதாபிமான முதலாளித்துவம் அவசியம்

அரசாங்கத்தால் மட்டுமே பணத்தை உருவாக்க முடியாது – மனிதாபிமான முதலாளித்துவம் அவசியம்

Published on

பொதுவாக நோக்குமிடத்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கையின் பிரகாரம், தீவிர முதலாளித்துவம், தீவிர நட்பு வட்டார முதலாலித்துவம் என்பன முற்றாக நிராகரிக்கப்படுவதாகவும், அதுமட்டுமல்லாமல், அனைத்தையும் அரசே செய்ய வேண்டும், அரசாங்கமே சகல முயற்சியாண்மைகளையும் செய்ய வேண்டும் என்ற தீவிர சோசலிசவாதமும் இங்கு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டிற்கு பொதுவாக பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் பொது இணக்கப்பாட்டினை ஏற்படுத்தும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட எதிர்க்கட்சியின் சர்வகட்சி ஒன்றியத்தின் செயற்குழு இன்று(08) பாராளுமன்றத்தில் கூடியபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்பிரகாரம், நாட்டின் தற்போதைய மாற்று மத்தியஸ்த பாதை எனும் மூன்றாவது பாதையே எனவும், அந்த மாற்றில், தனியார் தொழில்முனைவு, சமூக சந்தை பொருளாதாரம் மற்றும் பெரும்பாலான வழங்கல் மற்றும் தேவை தனியார் தொழில் முனைவோர் மூலம் மேற்கொள்ள முடியும் என்றாலும் அவ்வாறு சமூகத்தில் உருவாக்கப்படும் செல்வத்தை தனியார் தொழில் முனைவோர் மூலம் பகிர்ந்தளிக்க முடியாது எனவும், சமூக நீதிக்கு அமைவாக வளங்களைப் பகிர்ந்தளிக்க அரசாங்கத்தின் தலையீடு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உண்மையில், ஐக்கிய மக்கள் சக்தி மத்தியஸ்த வழியிலான பொருளாதார நோக்கைக் கொண்டுள்ளதாகவும், அரசாங்கத்தால் மட்டுமே பணத்தை உருவாக்க முடியாது என்பதனால் மனிதாபிமான முதலாளித்துவம் அவசியம் என்றும், அது நியாயமாக அமைய வேண்டும் என்றும், அதன் மூலம் அனைவரையும் வெற்றிபெறச் செய்வதாக அமைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மத்திய வங்கிச் சட்டம் போன்ற விசேட விடயங்களை குழுக்களின் ஊடாக கலந்துரையாடும் போது இந்த மத்தியஸ்த நடுநிலைப் பாதையை அல்லது சமூக நீதியை நிலைநாட்டும் கலப்புப் பொருளாதார முறைமைக்கு செல்ல வேண்டும் எனவும், தனியார் தொழில்முனைவு மற்றும் சமூக சந்தைப் பொருளாதாரம் மூலம் நாம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும் எனவும், இதன் ஊடாக நாட்டைப் பலப்படுத்த முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...