follow the truth

follow the truth

June, 20, 2025
HomeTOP1கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு

Published on

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (19) இரவு 10:00 மணி முதல் சனிக்கிழமை (20) காலை 8:00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கோட்டே மற்றும் கடுவெல நகர சபைகள், மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைகள் மற்றும் கொழும்பு 4,5,7,8 ஆகிய பிரதேசங்களில் நீர் வெட்டு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இன்று இரவு முதல் 10 மணித்தியாலங்களுக்கு இந்த நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு நுகர்வோருக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், தேவையான நீரை சேமித்து வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்க்க பொறுப்புள்ள அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்படும்

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை...

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு...

ஹர்ஷன சூரியப்பெரும பா.உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு...