follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1"மிஹிந்தலை பெரஹெரவுக்கு தீபங்களை ஏந்திச் செல்வோம்"

“மிஹிந்தலை பெரஹெரவுக்கு தீபங்களை ஏந்திச் செல்வோம்”

Published on

இந்த வருடம் பொசன் தேசிய விழா நடைபெறவுள்ள மிஹிந்தலை விகாரைக்கு மின்சாரம் வழங்க முடியாது என அநுராதபுரம் மின் பொறியியலாளர் தம்மிக்க ஜயவர்தன பொசன் குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான நிதி கிடைக்காததே முக்கிய காரணம் என்றும் மின்பொறியாளர் தெரிவித்தார்.

பொசன் குழு கூட்டம் நேற்று (24) மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் நடு மண்டபத்தில் மிஹிந்தலை விகாரையின் தலைவர் வலஹங்குனவேவே தம்மரதன தேரர் தலைமையில் பொசன் குழுவின் தலைவர் மாவட்ட செயலாளர் ஜானக ஜயசுந்தர தலைமையில் நடைபெற்றது.

பொசன் பண்டிகையின் போது சாலைத்தடைகள், பக்தர்கள் தங்கும் இடங்கள், குளியலறைகள், கழிப்பறைகள், கட்டப்பட்ட இடங்களுக்கு மின்சாரம் வழங்க பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை என மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.

இந்த வருட பொசன் பண்டிகை காரணமாக மிஹிந்தலை யாத்திரை நடவடிக்கைகளை மெழுகுவர்த்தி மற்றும் தீபங்களுடன் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக மிஹிந்தலை விகாரை பீடாதிபதி வலவஹங்குன்வெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...