follow the truth

follow the truth

June, 28, 2025
HomeTOP1அரச சேவை டிஜிட்டல்மயமாக்களுக்கு விசேட முகவர் நிறுவனம்

அரச சேவை டிஜிட்டல்மயமாக்களுக்கு விசேட முகவர் நிறுவனம்

Published on

இலங்கையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிப்பதற்காக “கணினி செயலிகளை ” உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் அரச நிறுவனங்களுக்காக “கணினி செயலிகளை” உருவாக்கும் பணி தனியார் நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும், எதிர்காலத்தில் டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனங்களினாலேயே இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று(07) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்க நிதிக்குழுவின் புதிய தலைவராக ஜக்கிய மக்கள் சக்தி எம்.பி கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு முன்மொழிந்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

குழுக்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களின் விதிகள் குறித்து அந்தக் குழுக் கூட்டங்களில் எம்.பி.க்கள் கூடி முடிவு எடுக்க வேண்டும். பாராளுமன்றத்தில் குழுக் கூட்டத்திற்கு இடமில்லை என்றால் எமக்கு வேறு கட்டிடம் ஒன்றை பெறமுடியும். இதில் பங்கேற்பவர்களுக்கு தனியான கொடுப்பனவு செலுத்த முடியும். பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கும் முன்னர் குழுக்களில் குறைந்தது ஒரு வாரமாவது ஆராய்ந்து உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வுடன் முன்வைக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். நாளை சமர்ப்பிக்கப்படும் சட்டமூலத்தை இன்று எம்.பி.க்களிடம் கொடுத்தால் பயனில்லை. அதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது எம்.பி.க்களுக்கு அவகாசம் கொடுப்பது உகந்தது.

உலக வங்கி உதவியின் கீழ் இடைக்கால வரவு செலவுத் திட்ட அலுவலகத்தை நிறுவ நிதி பெறப்பட்டுள்ளது. அதைத் தொடர உங்கள் உதவி தேவை. குழுக்கள் மற்றும் ஆலோசனைக் குழுவின் தலைவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் பொறுப்புகளை குழுவில் கூடி முடிவு செய்து வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் இந்த நாட்டில் உள்ளூராட்சி சபை மட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரிகள் (DRO) இருந்தனர். இந்தியாவில் வசூல் செய்யும் அதிகாரிகள் இருந்தனர். ஆனால் இலங்கையில் பிரதேச செயலகங்கள் விரிவடைந்ததும் மாவட்ட வருவாய் உத்தியோகத்தர்கள் காணாமல் போனார்கள்.

அதற்காக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் அதிகாரிகள், அரசுக்கு வருவாயை வசூலிக்காமல், அரசின் பணத்தை செலவழித்தனர். எனவே, வருவாய் வசூலிக்க, குறைந்தபட்சம் இருநூறு மாவட்ட வருவாய் அலுவலர்களையாவது அரசாங்கம் நியமிக்க நேரிடும்.

மேலும், இதுவரை அரசு நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான கணினி செயலிகளை உருவாக்குவது தனியார் துறையால் மேற்கொள்ளப்பட்டது. அதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான டிஜிட்டல் மேம்பாட்டு முகவர் நிறுவனம் உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன்படி, எதிர்காலத்தில் இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கான கணினி செயலிகள் யாவும் அந்த நிறுவனங்களினால் உருவாக்கப்படும். மேலும், பட்ஜெட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன், அரசின் பணம் எப்படி செலவிடப்பட்டது என்பது குறித்து, துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாரஹேன்பிட்டியில் 3வது ஒசுசல திறக்கப்பட்டது

நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பிரதானமான தனியார்...

இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்கு அனுமதி

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம்...