follow the truth

follow the truth

June, 30, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம்

ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம்

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஜனாதிபதி தலைமையிலான இலங்கை குழுவினர் கலந்துரையாடவுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல். பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை, கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது மலையகம் – 200 தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மலையகம் – 200 நிகழ்வுக்கு இந்திய பிரதிநிதிகளை அழைப்பதற்கான கோரிக்கையும் விடுக்கப்படும் என தெரியவருகின்றது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: விசாரணை அறிக்கை அடுத்த வாரம்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய விசாரணையை முன்னெடுத்துவரும் ஐந்து பேர் கொண்ட குழுவின்...

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் மீட்பு

மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இரண்டு சொகுசு வாகனங்கள், பண்டாரகம...

மீன்பிடி விபத்துகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு குழு

மீன்பிடி விபத்துகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு குழுவை நியமிக்குமாறு மீன்வளத்துறை பணிப்பாளர் ஜெனரல் சுசந்தா கஹவத்தேவுக்கு மீன்வளத்துறை...