follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுவௌ்ளைப்பூண்டு மோசடி - வர்த்தகரின் மகன் விளக்கமறியலில்

வௌ்ளைப்பூண்டு மோசடி – வர்த்தகரின் மகன் விளக்கமறியலில்

Published on

லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (23) வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பொது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோசடியான முறையில் வௌ்ளைப்பூண்டை கொள்வனவு செய்த நபரின் மகனே பம்பலப்பிட்டியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

1,17,19,520 ரூபா பணத்தை மோசடி செய்வதற்காக போலி ஆவணம் தயாரித்தமை, அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...