follow the truth

follow the truth

July, 21, 2025
Homeஉள்நாடுகளுத்துறை வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சை நிறுத்தம்?

களுத்துறை வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சை நிறுத்தம்?

Published on

களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சைக்கு தேவையான தடுப்பூசி (Heavy Marcaine) கிடைக்காத காரணத்தினால் சிசேரியன் அறுவை சிகிச்சைகளை நிறுத்த வேண்டியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலையில் கடந்த 11ம் திகதி இடம்பெற்ற விசேட வைத்தியர்கள் கூட்டத்தில் மருத்துவமனையில் அந்த தடுப்பூசிகளின் 17 டோஸ்கள் மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் தேவைக்கு இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவு கையிருப்பு உள்ளது.

இதனால், உரிய தடுப்பூசிகள் கிடைக்காததால், சிசேரியன் அறுவை சிகிச்சையை நிறுத்துவதுடன், சிசேரியன் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தாய்மார்களை, வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விசேட சுற்றிவளைப்பில் 1,241 பேர் கைது

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,241 நபர்கள் கைது...

ஆகஸ்ட் 10ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்...

ரோஹிதவின் மகள் – மருமகன் வெளிநாடு செல்ல தடை

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகன் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாலனை ஊழல் தடுப்பு பிரிவின்...