follow the truth

follow the truth

May, 15, 2025
Homeவிளையாட்டுகிளையன் எம்பாப்பே - 300 மில்லியன் டொலர்களுக்கு வாங்கியதா சவுதி அரேபியா?

கிளையன் எம்பாப்பே – 300 மில்லியன் டொலர்களுக்கு வாங்கியதா சவுதி அரேபியா?

Published on

சவுதி அரேபியாவின் அல் – ஹிலால் கால்பந்து விளையாட்டுக் கழகம் உலகின் அதி சிறந்த வீரரான மெஸ்ஸியை தன்னுடைய கழகத்துக்கு வாங்க கடந்த சில வாரங்களாக முயற்சிகளை மேற்கொண்டாலும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. மெஸ்ஸி அமெரிக்காவின் மியாமி கழகத்தில் சேர்ந்தார்.

இந்நிலையில்தான் அல் ஹிலால் கழகம் உலகின் மற்றுமொரு தலைசிறந்த இளம் வீரரான க்ளையன் எம்பாப்பேவை 300 மில்லியன் டொலர்களுக்கு வாங்க தனது ஏலத்தை அறிவித்துள்ளது. உலகிலேயே ஒரு வீரர் விலை போகும் அதிக தொகை இது என கூறப்படுகின்றது.

அண்மைக்காலமாக சவுதி அரேபியாவின் பல விளையாட்டு கழகங்கள் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களை தங்களுடைய அணிகளுக்காக வாங்கி வருகின்றது. அந்த பட்டியலில் அண்மையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 200 மில்லியன் டொலர்களுக்கு அல் – நாசர் கழகத்தால் வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்...

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சனியன்று மீண்டும் ஆரம்பம்

இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரை மீண்டும் மே 17 ஆம் திகதி தொடங்க இந்திய கிரிக்கெட்...

வீரர்களை நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பு

தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை...