follow the truth

follow the truth

May, 5, 2025
Homeஉலகம்சீனாவில் விண்ணைத் தொடும் கட்டிடங்களை கட்டத் தடை

சீனாவில் விண்ணைத் தொடும் கட்டிடங்களை கட்டத் தடை

Published on

சீனாவில் சிறிய நகரங்களில் விண்ணை தொடும் அளவிற்கு கட்டடங்களை கட்ட சீனா தடை விதித்துள்ளது.

சீனாவில் மூன்று மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகையுள்ள நகரங்களில் 150 மீட்டரைவிட (492 அடி) உயரமான கட்டடங்களை கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் தொகையை விடவும் அதிகமாக உள்ள நகரங்களில் 250 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் கட்டடங்களைக் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவில் ஏற்கெனவே 500 மீட்டர்களை விட உயரமான கட்டடங்களை கட்ட தடை உள்ளது.

சென்சென்னில் உள்ள 632 மீ ஷாங்காய் டவர் மற்றும் 599.1 மீ பீங் ஆன் ஃபைனான்ஸ் சென்டர் உட்பட உலகில் மிகவும் உயரமான கட்டடங்களில் சில சீனாவில் உள்ளன.

கண்ணைக் கவரும் கட்டடங்களை கட்டுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் உள்ளூர் கட்டுமான நிறுவனங்களை கண்டித்து, சீனா தொடர்ந்து விலையுர்ந்த தோற்றப்பொலிவுக்காக கட்டப்பட்ட கட்டடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த வருடத்தில் ஆரம்பித்தில் அந்நாட்டு அரசு ‘அழகற்ற கட்டடக்கலை’க்கு தடை விதித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...