follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉலகம்சீனாவில் விண்ணைத் தொடும் கட்டிடங்களை கட்டத் தடை

சீனாவில் விண்ணைத் தொடும் கட்டிடங்களை கட்டத் தடை

Published on

சீனாவில் சிறிய நகரங்களில் விண்ணை தொடும் அளவிற்கு கட்டடங்களை கட்ட சீனா தடை விதித்துள்ளது.

சீனாவில் மூன்று மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகையுள்ள நகரங்களில் 150 மீட்டரைவிட (492 அடி) உயரமான கட்டடங்களை கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் தொகையை விடவும் அதிகமாக உள்ள நகரங்களில் 250 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் கட்டடங்களைக் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவில் ஏற்கெனவே 500 மீட்டர்களை விட உயரமான கட்டடங்களை கட்ட தடை உள்ளது.

சென்சென்னில் உள்ள 632 மீ ஷாங்காய் டவர் மற்றும் 599.1 மீ பீங் ஆன் ஃபைனான்ஸ் சென்டர் உட்பட உலகில் மிகவும் உயரமான கட்டடங்களில் சில சீனாவில் உள்ளன.

கண்ணைக் கவரும் கட்டடங்களை கட்டுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் உள்ளூர் கட்டுமான நிறுவனங்களை கண்டித்து, சீனா தொடர்ந்து விலையுர்ந்த தோற்றப்பொலிவுக்காக கட்டப்பட்ட கட்டடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த வருடத்தில் ஆரம்பித்தில் அந்நாட்டு அரசு ‘அழகற்ற கட்டடக்கலை’க்கு தடை விதித்தது.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை...

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...