follow the truth

follow the truth

July, 9, 2025
Homeஉலகம்தொங்கா தீவில் முதலாவது கொவிட் தொற்றாளர் அடையாளம்

தொங்கா தீவில் முதலாவது கொவிட் தொற்றாளர் அடையாளம்

Published on

கடந்த வெள்ளிக்கிழமை தொங்கா தீவு நாட்டில், முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்தில் இருந்து மக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தொங்கா நாட்டின் பிரதமர் பொஹிவ து’இ’ஒனெடோவா (Pohiva Tu’i’onetoa), தொங்கபது என்கிற முக்கிய தீவில் உள்ளவர்கள் அடுத்த வாரம் ஊரடங்கை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாத சில நாடுகளில் தொங்காவும் ஒன்றாக இருந்தது. இந்த தீவு நாடு, நியூசிலாந்துக்கு வட கிழக்குப் பகுதியில் உள்ளது. இந்நாட்டில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று சுமார் 2 ஆண்டுகளாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், தொங்கா தீவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரைந்து கொண்டிருக்கிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறுமிகள் வழக்கில் டிரம்ப் தொடர்பு? – எலான் மஸ்க் கிளப்பிய பெரும் சர்ச்சை

அமெரிக்க ஜனதிபதி டொனால்டு டிரம்பின் முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான எலான் மஸ்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்ற...

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கப்படும்...