follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடு98,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும்

98,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும்

Published on

பல்வேறு அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் நிறுத்தப்பட்டுள்ள 98,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார்.

அதற்கு 24,000 மில்லியன் ரூபா தேவைப்படும் என அவர் வலியுறுத்தினார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கங்கள் ஆரம்பித்த திட்டங்களை நிறைவேற்றாமல் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் புதிய திட்டங்களை ஆரம்பித்ததால் அரைகுறையாக இருந்த 98,000 வீடுகள் தேசிய வீடமைப்பு அமைப்பில் சேர்க்கப்பட்டதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நிட்டம்புவ ரன்பொகுனுகம வீட்டுத்திட்டத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று (03) இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...