follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுகுறைந்த வருமானமுடைய நபர்களுக்கு சீனக் குடியரசின் உதவித்திட்டம்

குறைந்த வருமானமுடைய நபர்களுக்கு சீனக் குடியரசின் உதவித்திட்டம்

Published on

மேல்மாகாணத்தில் குறைந்த வசதிகளைக் கொண்ட குடியிருப்புக்களில் வசிக்கின்றவர்களை புனர்வாழ்வளித்து வசதிகளுடன் கூடிய நகர்ப்புற உத்தேச வீட்டுத்திட்ட முறையில் வீடுகளில் குடியமர்த்துவதற்கு மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய நடைமுறைப்படுத்தப்படும் மறுமலர்ச்சிக் கருத்திட்டத்திற்கான உதவித்தொகையாக 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்காக 552 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்குவதற்கு சீனக் குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தக் கருத்திட்டத்தின் கீழ் காணி அபிவிருத்தி செய்தல் மற்றும் வேலைத்தளத்திற்குத் தெவையான உட்கட்டமைப்பு வசதிகள் இலங்கை அரசால் வழங்கப்படும். அதற்கமைய, சீனக் குடியரசுடன் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...