follow the truth

follow the truth

May, 16, 2024
HomeTOP1பங்களாதேஷ் ரயில் விபத்தில் 17 பேர் பலி

பங்களாதேஷ் ரயில் விபத்தில் 17 பேர் பலி

Published on

பங்களாதேஷில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூறு பேர் காயமடைந்துள்ளனர்.

பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியான டாக்கா மாகாணம் கிஷோர்கஞ்ச் மாவட்டம் பைரப் ரயில் நிலையத்தில் இருந்து டாக்கா நோக்கி இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்துள்ளது.

பைரப் ரயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்து சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக பயணத்தடம் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

மாற்று தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்மாறிக் கொண்டிருந்தபோது திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று வேகமாக வந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...

ஏப்ரலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...