follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுபலவீனமான அதிகாரிகளை நீக்கி, திறமையான அதிகாரிகளுடன் பணியாற்ற தயார்

பலவீனமான அதிகாரிகளை நீக்கி, திறமையான அதிகாரிகளுடன் பணியாற்ற தயார்

Published on

கம்பஹா மாநகர சபையின் அனைத்து பிரிவுகளையும் கணக்காய்வு செய்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா மாநகர ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

மாநகரசபைக்கு சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

இதற்கு அதிகாரிகளின் பலவீனங்களே பிரதான காரணம் என தெரிவித்த அமைச்சர், அவ்வாறான அதிகாரிகளை நீக்கிவிட்டு திறமையான அதிகாரிகளை கொண்டு பணிகளை தொடர தயார் எனவும் தெரிவித்தார்.

கம்பஹா மாநகர சபையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...