அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்று (09) மாலை 5 மணி முதல் நாளை (10) காலை 9 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.