follow the truth

follow the truth

July, 29, 2025
Homeஉள்நாடுமாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக எதிர்காலத்தில் திறமையான தலைவர்களை உருவாக்க வாய்ப்பு

மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக எதிர்காலத்தில் திறமையான தலைவர்களை உருவாக்க வாய்ப்பு

Published on

எதிர்காலத்தில் நாட்டிற்கு சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய திறமையானவர்கள் குழுவொன்று மாணவர் பாராளுமன்றங்கள் ஊடாக உருவாகி வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

குருநாகல் மலியதேவ வித்தியாலய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து உரையாற்றும் போதே ஜனாதிபதியின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.

குருநாகல் மலியதேவ வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பண கூட்டம் இன்று (30) பழைய பாராளுமன்றமான தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

குருநாகல் மாவட்டத்தின் எதிர்காலத்தை வழிநடத்திச் செல்வதற்கும் அதற்குத் தலைமை தாங்கவும் அதற்காக அமைச்சர் பதவிகளை வகிக்கவும் ஒரு குழு தயாராகி வருவதை உங்கள் மூலம் நான் காண்கிறேன். எதிர்காலத்தில் குருநாகல் மாவட்டத்தின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்று நாட்டை வழிநடத்த உங்களுக்கு பலமும் தைரியமும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

குருநாகல் மலியதேவ வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தில் பிரதான உரை நிகழ்த்திய பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைய ஆரம்பிக்கப்பட்ட மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக எதிர்காலத்தில் திறமையான தலைவர்களை உருவாக்க பெரும் வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த...

“கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த மாலைதீவுகள் பணியாற்றும்”

ஜனாதிபதி திசாநாயக்கவையும் அவரது தூதுக்குழுவையும் மாலைதீவிற்கு வரவேற்பது எனக்குக் கிடைத்த பெரும் மரியாதை மற்றும் பாக்கியம் ஆகும். உங்கள்...

நாமல் இன்று கைதாகும் சாத்தியம்

கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனு மூலம்...