follow the truth

follow the truth

July, 25, 2025
HomeTOP1நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பில் கல்விசாரா ஊழியர்கள்

நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பில் கல்விசாரா ஊழியர்கள்

Published on

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்றும்(28) நாளையும்(29) இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் இன்று(28) யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் 20.02.2024 திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் இன்றும் நாளையும் (28,29) இரு தினங்களும் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வேண்டியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் அதேசமயம் நாளை(29) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் இன்றும்(28) நாளையும் (29) வேலை நிறுத்தப் போராட்டத்தினை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்கொள்ளவிருக்கின்றது.

அத்துடன் இன்று(28) காலை 11.00 மணியளவில், யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுப்பது என்றும் நாளை(29) கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் நடைபெறவுள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ல் இதுவரை 36,000 புற்றுநோயாளர்கள் அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதி

இந்த வருடத்தில் ஜனவரி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோய்...

இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொம்பனி தெரு பொலிஸில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உதவி...

அரச துறையின் மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில்களை வழங்கும் ஜப்பான்

2010 முதல், ஜப்பான் அரசாங்கம் இலங்கையில் இளம் நிர்வாக மட்ட பொது அதிகாரிகளின் தொழில் வளர்ச்சிக்கு முதுகலை திட்டங்களுக்கான...