follow the truth

follow the truth

July, 25, 2025
HomeTOP1நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று மேலும் அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று மேலும் அதிகரிப்பு

Published on

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (28) மேலும் அதிகரித்து அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடலால் உணரப்படும் வெப்பமானது வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று திணைக்களத்தின் முன்னறிவிப்புத் துறையின் துணை இயக்குநர் மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, அதிக சூரிய ஒளியின் காரணமாக தலைவலி, வாந்தி, உடல்வலி, தூக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று குழந்தைகள் நல நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா கூறுகிறார்.

“.. இன்றும், வரும் நாட்களிலும் நாம் மிகவும் சூடாக இருப்போம். இதனுடன் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுகிறது. உடலில் இருந்து வியர்வையுடன் உப்பு மற்றும் தண்ணீரும் வெளியேறுகிறது. இதனால், அனைவருக்கும் அசௌகரியம், வாந்தி, தலைவலி, உடல்வலி, தூக்கமின்மை, பசியின்மை, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

இவற்றைத் தடுக்க, தண்ணீர் மற்றும் உப்பு அதிகம் குடிக்க வேண்டும். கஞ்சி வகைகள், தேசிக்காய், ஆரஞ்சு, நாரத்தை, தோடம்பழ சாறுகள், இளநீர், செவ்விளநீர், தேங்காய் நீர் உள்ளிட்ட இயற்கை பானங்கள் நல்லது.”

இந்நிலைமை காரணமாக சிறுவர்களுக்கு தோல் நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

“இங்கே வியர்வை கொப்புளங்கள், அரிக்கும் தோலழற்சி போன்றவை ஏற்படுகின்றன. அவற்றை குறைக்க தண்ணீர் குடித்துவிட்டு குழந்தைகளை தண்ணீரில் இருக்க விடுங்கள். காலை மாலை 20 நிமிடம் தண்ணீரில் விளையாட விடுங்கள்.அதில் தவறில்லை குளிக்க பயப்பட வேண்டாம்.

முதல் 6 மாதம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டும் போதும். வயதான குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கவும், அத்துடன் உணவு கொடுக்கவும். சிறுநீரின் நிறத்தை பாருங்கள். சிறுநீர் கருமையாக இருந்தால் அதிகம் தண்ணீர் அருந்தக் கொடுக்கவும்..”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ல் இதுவரை 36,000 புற்றுநோயாளர்கள் அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதி

இந்த வருடத்தில் ஜனவரி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோய்...

இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொம்பனி தெரு பொலிஸில் கடமையாற்றும் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உதவி...

அரச துறையின் மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில்களை வழங்கும் ஜப்பான்

2010 முதல், ஜப்பான் அரசாங்கம் இலங்கையில் இளம் நிர்வாக மட்ட பொது அதிகாரிகளின் தொழில் வளர்ச்சிக்கு முதுகலை திட்டங்களுக்கான...