follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2பலஸ்தீன நிலத்தில் கட்டப்படும் இஸ்ரேலிய குடியிருப்புகள்

பலஸ்தீன நிலத்தில் கட்டப்படும் இஸ்ரேலிய குடியிருப்புகள்

Published on

மேற்குக் கரையை மையமாகக் கொண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலப் பகுதியில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் ஒரு வருடத்திற்குள் வரலாறு காணாத வகையில் விரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, 2023 ஒக்டோபர் வரையிலான ஒரு வருடத்தில் மேற்குக் கரையில் 24,300 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டிலிருந்து ஒரு வருடத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய வீடுகள் இதுவாகும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக் கரையில் நீண்டகாலக் கட்டுப்பாட்டை வைத்திருப்பதை இஸ்ரேல் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மேற்குக் கரையில் உள்ள ஐ.நா மனித உரிமை அலுவலகம் கூறுகிறது.

இதற்கிடையில், மேற்குக் கரையில் வன்முறையும் அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

ஒக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதல்கள் முடுக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும் தாக்குததாரிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் படைகள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...