follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2பலஸ்தீன நிலத்தில் கட்டப்படும் இஸ்ரேலிய குடியிருப்புகள்

பலஸ்தீன நிலத்தில் கட்டப்படும் இஸ்ரேலிய குடியிருப்புகள்

Published on

மேற்குக் கரையை மையமாகக் கொண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலப் பகுதியில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் ஒரு வருடத்திற்குள் வரலாறு காணாத வகையில் விரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேற்குக் கரையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, 2023 ஒக்டோபர் வரையிலான ஒரு வருடத்தில் மேற்குக் கரையில் 24,300 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டிலிருந்து ஒரு வருடத்தில் கட்டப்பட்ட மிகப் பெரிய வீடுகள் இதுவாகும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக் கரையில் நீண்டகாலக் கட்டுப்பாட்டை வைத்திருப்பதை இஸ்ரேல் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மேற்குக் கரையில் உள்ள ஐ.நா மனித உரிமை அலுவலகம் கூறுகிறது.

இதற்கிடையில், மேற்குக் கரையில் வன்முறையும் அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

ஒக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதல்கள் முடுக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும் தாக்குததாரிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் படைகள் தெரிவிக்கின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் தேர்தல் கடமைகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலாகும்...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி – 05 நாட்களில் 12 பேர் கைது

இம்மாதம் 22 ஆம் திகதியிலிருந்து இன்று வரையான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் 12 பேர்...

அமைச்சர் விஜயதாச உள்ளிட்டோருக்கு அழைப்பாணை

ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகள் வாக்களிப்பதற்கு வசதிகளை செய்துகொடுக்கும் செயன்முறைகளை வெளியிடுமாறு கோரி தாக்கல்...