follow the truth

follow the truth

July, 30, 2025
HomeTOP1'முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் ஆதரவு ரணிலுக்கு'

‘முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் ஆதரவு ரணிலுக்கு’

Published on

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடமே கூடி முடிவெடுக்கும் என கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எனினும், தமது தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, அதேபோல அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொட்டக்கலையில் நேற்று (10) இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“.. ஜனாதிபதியிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முதல் விடயம் மலையகத்தில் வீட்டுத் திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். அந்தவகையில் 10,000 வீட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்குரிய சூழ்நிலையை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

இரண்டாவது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்று அவசியம். தற்போது சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகின்றார். இது தற்காலிக தீர்வு மாத்திரமே. எனவே, நிரந்தர தீர்வு என்னவென்பதை ஜனாதிபதி முன்வைக்க வேண்டும்.

இறுதியாக காணி உரிமை விடயமாகும். இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி 4,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். காணி உரித்தும் வழங்கப்பட வேண்டும். இவற்றை செய்து, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவரை நாம் தாம் ஆதரிக்கவுள்ளோம்..” என கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிந்துலையில் பயங்கர விபத்து – 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

லிந்துலை - மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பகுதியில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு...

வெப்பமான வானிலை எச்சரிக்கை – நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, இன்று (30) முதல் நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும்...

இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில், பொதுமக்களிடையே உள்ள...