போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கி கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பிரசங்கம் செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.