follow the truth

follow the truth

May, 17, 2024
HomeTOP2ரணில் பொதுவேட்பாளராக களமிறங்கும் சின்னம்?

ரணில் பொதுவேட்பாளராக களமிறங்கும் சின்னம்?

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுச் சின்னத்துடன் இணைந்து போட்டியிடுவது நிரந்தரமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் மினுவாங்கொட தொகுதி அமைப்பாளரும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகருமான ஆஷு மாரசிங்க தெரிவித்திருந்தார்.

தேசிய வேட்பாளராக யானை, பொஹட்டுவ மற்றும் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் குழுக்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் ஜனாதிபதியின் ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் தனக்கு விசுவாசமான அரசியல் கட்சிகளின் வாக்குகளைப் பெறாமல் போகலாம் என்றும், பொஹொட்டுவ சின்னத்தில் போட்டியிட்டால் நட்புக் கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்களின் ஆதரவைப் பெறாமல் போகலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஜனாதிபதி தரப்பினர் கடந்த தேர்தல்களில் அன்னம் சின்னத்தில் போட்டியிட்டமையால் மற்றுமொரு அரசியல் சின்னத்தின் மீது கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பல விடயங்கள் கலந்துரையாடப்பட்ட போதிலும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதியின் ஆலோசகர் மேலும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதியின் ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும், தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அந்த உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குழுவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகும்போது அவருக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்வந்திருந்தால் அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டிருக்கும் எனவும் தற்போதைய பிரதமர் தினேஸ் குணவர்தனவிற்கு அந்த பதவி வழங்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி ஆலோசகர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவிடம் சிஐடி 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் டயானாவிடம் குற்றப் புலனாய்வுத் துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. அவர் பயன்படுத்திய...

எல்ல – வெல்லவாய வீதி திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பூரண கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன்...

சாதாரண தரப் பரீட்சையின் புவியியல் தாள் தொடர்பிலும் விசாரணை

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் குழுவிற்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை...