follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்`தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்' - மாலைத்தீவு அமைச்சர் கோரிக்கை

`தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்’ – மாலைத்தீவு அமைச்சர் கோரிக்கை

Published on

மாலைத்தீவு தனது பொருளாதாரத்துக்கு சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பி இருக்கிறது. அங்கு இந்தியர்கள் ஏராளமானோர் சுற்றுலா சென்று வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தலில் வென்ற முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலைத்தீவைப் புறக்கணிக்கும் நிலையில் இதனால் அந்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாலைத்தீவு அமைச்சர் இந்தியர்களிடம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடியை மாலைத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்தனர். இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் மாலைத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் பலர் தவிர்தனர். இதனால் மாலைத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது.

இதனால் சுற்றுலாவையே பிரதானமாக நம்பியிருக்கும் மாலைத்தீவு நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும் என்று மாலைத்தீவு சுற்றுலா அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...