follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2சமூக ஊடகங்களில் பரவும் போலி கடிதம் - மக்கள் ஏமாற வேண்டாம்

சமூக ஊடகங்களில் பரவும் போலி கடிதம் – மக்கள் ஏமாற வேண்டாம்

Published on

சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி கடிதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் 2024ம் ஆண்டு ஜூலைமாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்டது என தெரியப்படுத்தும் வகையில் ஆங்கில மொழியில் குறித்த ஆவணம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கடிதம் உட்பட அதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் அனைத்தும் முற்றிலும் போலியானவை எனவும் இலங்கை பொலிஸினால் அல்லது அதற்கு இணையான நிறுவனமொன்றினால் இதுபோன்று எந்தவொரு ஆவணமும் வெளியிடப்படவில்லையென பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போலி கடிதம் மற்றும் இணையத்தில் கடிதம் பிரசுரம் செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...