follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களை பயன்படுத்தியமை குறித்து விசாரணை

தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களை பயன்படுத்தியமை குறித்து விசாரணை

Published on

பல்வேறு அரசியல் கட்சிகளினால் தமது அரசியல் பிரசாரங்களில் சிறுவர்கள் பங்கேற்பது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பங்குபற்றுவதை அவதானித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையானது அனைத்து பெற்றோர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், பிள்ளைகள் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்கக் கூடாது என அறிவித்தல் விடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...