follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1டொலர் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு : இந்தியாவுடனான பேச்சுவார்த்தை வெற்றி

டொலர் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு : இந்தியாவுடனான பேச்சுவார்த்தை வெற்றி

Published on

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும் எரிபொருள், மருத்துவப் பொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் கைத்தொழில்களுக்கு அவசியமான பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

டொலர் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்நாடுகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என தான் நம்புவதாகவும் நிதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையானது வெற்றியளித்துள்ளதாகவும் நிதியமைச்சர் மெலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்களின் இடர் கடன் தொடர்பான சுற்றறிக்கை

2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் ஆகக் குறைந்தது அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதை கவனத்திற் கொண்டு...

வெசாக் பண்டிகை – நாடு முழுவதும் 7437 தன்சல்கள் பதிவு

வெசாக் பண்டிகைக்காக தற்போது 7,437 தன்சல் ஏற்பாட்டாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூர்...

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – விசாரணை ஆரம்பம்

மாதுரு ஓயாவில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த முடியும்...