follow the truth

follow the truth

June, 25, 2025
HomeTOP1தீபாவளிக்காக கைவிடப்பட்ட வேலை நிறுத்தம் மீண்டும் நாளை

தீபாவளிக்காக கைவிடப்பட்ட வேலை நிறுத்தம் மீண்டும் நாளை

Published on

தீபாவளியை பண்டிகையினை முன்னிட்டு ரயில் நிலைய அதிபர்களின் சங்கத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று தொழிற்சங்க நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாது என அதன் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடைமுறைகளை முறைப்படுத்துதல், சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் அன்றைய தினம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.

எவ்வாறாயினும், வேலை நிறுத்தத்துடன், முன்னறிவிப்பின்றி காங்கேசந்துறை புகையிரதம் பயணித்ததால், புகையிரத திணைக்களத்திற்கு கிட்டத்தட்ட 30 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக, புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“பிரஜாசக்தி” தேசிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் ஜூலை 04 ஆரம்பம்

சமூகத்தை வலுவூட்டல் மற்றும் பொருளாதார நன்மைகளை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "பிரஜாசக்தி"...

ஜயவர்தனபுர பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய மாணவர்களிடம் தேவையற்ற விதத்தில் பணம் அறவீடு?

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் விடுதிக்கு சேதம் ஏற்படுத்திய பத்து மாணவர்களிடமிருந்து நிர்வாகம் தேவையற்ற விதத்தில்...

துன்புறுத்தல், வன்முறையைத் தடுக்க பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்காக ஒரு தேசிய பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த...