follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுஆண்களின் நிர்வாண புகைப்படங்களை கொண்டு பண மோசடி

ஆண்களின் நிர்வாண புகைப்படங்களை கொண்டு பண மோசடி

Published on

சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு நிர்வாண புகைப்படங்களை கொண்டு வந்து இணையத்தில் விளம்பரம் செய்வதாக கூறி, வலுக்கட்டாயமாக பணம் பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஒருவர் வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆண் ஒருவரை தொடர்பு கொண்டு அவரது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பெற்றுக்கொண்டு, குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாக தெரிவித்து, 7 இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று (05) தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள கவுன்சில் அவென்யூவில் வைத்து வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துல்ஹிரிய பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவர்.

சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவின் கோரிக்கை

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இன்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை...

பிரதமரின் தேர்தல் விதிமீறலுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை – தேர்தல் ஆணைக்குழு

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய...

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...