follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1இன்று பலத்த பாதுகாப்பு - சுமார் 90, 000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில்

இன்று பலத்த பாதுகாப்பு – சுமார் 90, 000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில்

Published on

இன்று இடம்பெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்காக சுமார் 90, 000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

63,145 பொலிஸார் நேரடியாகத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த மூவாயிரத்து 200 உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

3000 இற்கும் அதிகமான பொலிஸ் குழுக்கள் நடமாடும் சோதனை நடவடிக்கைகளுக்காகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு கடமைகளில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 12,000 இற்கும் அதிகமான சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி

இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக்...