follow the truth

follow the truth

June, 30, 2025
HomeTOP2தேசியப்பட்டியல் குறித்து சிலிண்டரின் நிலைப்பாடு நாளை அறிவிக்கப்படும்

தேசியப்பட்டியல் குறித்து சிலிண்டரின் நிலைப்பாடு நாளை அறிவிக்கப்படும்

Published on

புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் பரிந்துரைப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளரால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் குறித்து கட்சியில் எவருக்கும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து திருமதி தலதா அத்துகோரள மற்றும் பொதுஜன பெரமுன சார்பில் காஞ்சன விஜேசேகர ஆகிய இரு சபை உறுப்பினர்களையும் நியமிக்க முன்மொழியப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“முக்கியமாக இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் எழுந்துள்ளது. ஏனைய அரசியல் கட்சிகள் இது தொடர்பில் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்தன. அந்த கலந்துரையாடலின் போது தெரியாமல் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் கட்சியில் இருந்து அவரது பெயரை சமர்ப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் அது வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒரு கட்சி என்ற வகையில் திருமதி தலதா அத்துகோரளை இந்தப் பிரதிநிதித்துவத்திற்கு அனுப்ப நினைத்தோம். விவாதிக்கப்பட்டு வந்தது. இதுபற்றி சரியான முடிவு எடுப்பதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் நாங்கள் குழுவாக இணைந்து செயல்பட்டதால், நாளை காலை 10:00 மணிக்கு மற்ற அரசியல் கட்சிகளுடன் பேசி இறுதி முடிவு எடுப்போம். இந்த நியமனம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதுவும் தெரியாது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில், திருமதி தலதா அத்துகோரள பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற எமது பிரேரணை விவாதிக்கப்பட்டு வந்தது..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: விசாரணை அறிக்கை அடுத்த வாரம்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய விசாரணையை முன்னெடுத்துவரும் ஐந்து பேர் கொண்ட குழுவின்...

பயனர்கள் போனில் உள்ள புகைப்படங்களை ஸ்கேன் செய்து கிளவுடில் சேமிக்கும் மெட்டா AI?

மெட்டா நிறுவனத்தின் ஏஐ பிரிவான ‘மெட்டா ஏஐ’ தொடர்பான புதிய தகவல், சமூக வலைதள பயனர்களிடம் பெரும் அதிர்வை...

யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜகன்நாதர் ஆலயத்தின் வருடாந்திர ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட...