follow the truth

follow the truth

June, 30, 2025
HomeTOP2"நாட்டின் முன்னேற்றம் தான் முக்கியம் – தனிநபர்களின் லேபல்கள் அல்ல.."

“நாட்டின் முன்னேற்றம் தான் முக்கியம் – தனிநபர்களின் லேபல்கள் அல்ல..”

Published on

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சரியான நபர்களை சரியான அமைச்சுகளுக்கு நியமித்துள்ளார் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
“.. ஒரு நபரின் தகுதிகள், திறமைகள் மற்றும் அரசியல் அறிவு என்பனவே ஒரு அமைச்சை வழிநடத்துவதற்கான முதன்மை நிபந்தனை.. தவிர அவரது பாலினம், இனம் அல்லது மதம் அல்ல என்று தேசிய மக்கள் சக்தி கருதுகிறது

மற்றவர்களை விட அவர்களின் திறன்கள் மற்றும் பங்களிப்புகள் குறித்து அதிக நுண்ணறிவு கொண்ட ஒருவராக அவர் காணப்படுகின்றார்.

மதத்தின் அடிப்படையில் மட்டுமே அமைச்சரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தேவையற்ற பிளவுகளை தூண்டிவிட்டு நாம் முன்னேற வேண்டிய ஒற்றுமையையே குலைத்துவிடும் அபாயம் உள்ளது.

மத, இன வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் தொலைநோக்கு மற்றும் அர்ப்பணிப்பை நாங்கள் நம்பியதன் காரணமாகவே நாங்கள் NPP யை தெரிவு செய்தோம்.

குறிப்பிட்ட அமைச்சுக்களை யார் வகிக்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம் என்ற பிரிவினையான விவாதங்களால் திசைதிருப்பப்படாமல் முடிவுகளை வழங்குவதற்கான இடத்தை இந்த அரசாங்கத்திற்கு வழங்குவதன் மூலம் அந்த நம்பிக்கையை மதிப்போம்.

நாட்டின் முன்னேற்றம் தான் முக்கியம் – தனிநபர்களின் லேபல்கள் அல்ல..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: விசாரணை அறிக்கை அடுத்த வாரம்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய விசாரணையை முன்னெடுத்துவரும் ஐந்து பேர் கொண்ட குழுவின்...

பயனர்கள் போனில் உள்ள புகைப்படங்களை ஸ்கேன் செய்து கிளவுடில் சேமிக்கும் மெட்டா AI?

மெட்டா நிறுவனத்தின் ஏஐ பிரிவான ‘மெட்டா ஏஐ’ தொடர்பான புதிய தகவல், சமூக வலைதள பயனர்களிடம் பெரும் அதிர்வை...

யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜகன்நாதர் ஆலயத்தின் வருடாந்திர ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட...