follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1காத்தான்குடியில் பள்ளி சம்மேளன நிர்வாகமே நடக்கிறது! ஞானசார தேரர்

காத்தான்குடியில் பள்ளி சம்மேளன நிர்வாகமே நடக்கிறது! ஞானசார தேரர்

Published on

நாட்டின் சாதாரண பொதுமக்கள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென கோரவில்லை என ஒரே நாடு ஒரே சட்டம் என்னும் ஜனாதிபதி செயலணியின் பிரதானி கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை இன சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைமைகள் இன ஐக்கியத்திற்கு மாறாக இனப் பிளவினையே விதைத்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறனவர்களுக்கு அதிகாரங்களை வழங்கினால் நாடு பிரிவினையை நோக்கிச் செல்வதனை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தையோ அதற்கு அப்பாலான தீர்வினையோ பொதுமக்கள் கோரவில்லை எனவும் அதனை சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்களே கோரி நிற்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கரு அமுல்படுத்தப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உதாரணமாக காத்தான்குடியில், பள்ளி சம்மேளனத்தின்  நிர்வாகமே நடைபெறுகின்றது , அங்கு பொதுவான சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதில்லை என ஞானசார தேரர் தெற்கு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...

மாதுறு ஓயா விபத்தில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்தார் இராணுவத் தளபதி

மாதுருஓயாவில் உள்ள இலங்கை இராணுவ விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் நடைபெறவிருந்த பயிற்சி விடுகை அணிவகுப்பு விழாவின் போது...