follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1காத்தான்குடியில் பள்ளி சம்மேளன நிர்வாகமே நடக்கிறது! ஞானசார தேரர்

காத்தான்குடியில் பள்ளி சம்மேளன நிர்வாகமே நடக்கிறது! ஞானசார தேரர்

Published on

நாட்டின் சாதாரண பொதுமக்கள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென கோரவில்லை என ஒரே நாடு ஒரே சட்டம் என்னும் ஜனாதிபதி செயலணியின் பிரதானி கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை இன சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைமைகள் இன ஐக்கியத்திற்கு மாறாக இனப் பிளவினையே விதைத்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறனவர்களுக்கு அதிகாரங்களை வழங்கினால் நாடு பிரிவினையை நோக்கிச் செல்வதனை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்தையோ அதற்கு அப்பாலான தீர்வினையோ பொதுமக்கள் கோரவில்லை எனவும் அதனை சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர்களே கோரி நிற்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கரு அமுல்படுத்தப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உதாரணமாக காத்தான்குடியில், பள்ளி சம்மேளனத்தின்  நிர்வாகமே நடைபெறுகின்றது , அங்கு பொதுவான சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதில்லை என ஞானசார தேரர் தெற்கு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...

நோய்வாய்ப்படும் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனைகளை நீர்மாணிக்க அவதானம்

காட்டு யானைகளுக்கு நோய் ஏற்படும் போது அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முறைமையொன்று இல்லை என்றும், அதனால் நடமாடும் மற்றும்...