follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1தைப்பொங்கல் மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

தைப்பொங்கல் மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

Published on

தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை – பதுளை மற்றும் பதுளை – கோட்டை மற்றும் கோட்டை – காங்கேசந்துறைக்கு இடையில் இந்த விசேட புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனவரி 10, 12, 14, 17, 19, 24, 26, 31 ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

பெப்ரவரி 2, 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் விசேட ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரி மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...