ஜூன் மாதத்தின் முதல் 22 நாட்களில், 93,486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிதுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,123,289 என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் முறையே இந்தியா, பிரிட்டன், சீனா, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவிலிருந்து வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.