follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1தாதியர்களின் ஓய்வு வயது 60 ஆக குறைப்பு

தாதியர்களின் ஓய்வு வயது 60 ஆக குறைப்பு

Published on

தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால், எதிர்காலத்தில் கடுமையான பிரச்சினைகள் உருவாகலாம் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது.

தற்போது தாதியர் துறையில் நிலவும் மனிதவளக் குறைபாடு, ஓய்வு வயதை குறைப்பதால் மேலும் மோசமாகும் என சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக உயர்த்திய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, சுகாதார அமைச்சு உயர் நீதிமன்றத்தில் மேல் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றும் பணியை இடைநிறுத்த மார்ச் 6 ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 4 ஆம் திகதி, 60 வயதை நிறைவு செய்த அனைத்து தாதியர் அதிகாரிகளும் கட்டாய ஓய்வு பெற வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

CID யில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு...

ஜூலை 22 முதல் பாராளுமன்றம் கூடவுள்ளது

ஜூலை 22 ஆம் திகதி முதல் 25 வரை கூடவிருக்கும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள தினப்பணிகள் சபாநாயகர்...

2030 இல் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி பணிப்புரை

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை (IRD) பலப்படுத்தல்...