follow the truth

follow the truth

July, 23, 2025
HomeTOP2‘உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பு’ தொடர்பில் விவாதம்

‘உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பு’ தொடர்பில் விவாதம்

Published on

எதிர்வரும் 24 ஆம் திகதி இரண்டாவது மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலத்தை அன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (22) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

அதற்கமைய, அன்றைய தினத்தில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ‘உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பு’ தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை பி.ப. 5.30 மணி வரை நடாத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான தொழில்நுட்ப விடயங்கள் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் மற்றுமொரு பாராளுமன்ற அமர்வு தினமொன்றில் இந்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரணில் விக்ரமசிங்க அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2022 இல் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்ட காலத்தில் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளால்...

அஸ்வெசும – ஜூலை மாத கொடுப்பனவு நாளை

அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்...

பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் விபத்து – 16 மாணவர்கள் மருத்துவமனையில்

பெலியத்த - வீரகெட்டிய வீதியில் பெலிகல்ல பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்...