follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுகொழும்பில் ஒரே நாளில் இரண்டு மசாஜ் நிலையங்களில் கொள்ளை!

கொழும்பில் ஒரே நாளில் இரண்டு மசாஜ் நிலையங்களில் கொள்ளை!

Published on

நேற்றிரவு கொள்ளுப்பிட்டி மற்றும் திம்பிரிகஸ்யாயவில் அமைந்துள்ள இரண்டு மசாஜ் நிலையங்களுக்குள் புகுந்த திருடர்கள் ஊழியர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் கொள்ளுப்பிட்டி மசாஜ் நிலையத்திற்கு வருகை தந்த இருவர், ஆயுதங்களை காட்டி இரண்டு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, திம்பிரிகஸ்யாயவில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு இரவு 11.00 மணியளவில் இரண்டு கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். ஊழியர்களிடமிருந்த ரூ. 35,000 மற்றும் ஒரு தங்க வளையலை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும், கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதை கொண்டு ,இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மஹேஷியின் மகள் விளக்கமறியலில்

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை...

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...