follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுசபாரி வாகனங்களால் பயந்தோடிய யானை : விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு (VIDEO)

சபாரி வாகனங்களால் பயந்தோடிய யானை : விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு (VIDEO)

Published on

யால தேசிய பூங்காவில் யானை ஒன்று தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, வனவளத்துறை அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

யால தேசிய பூங்காவிற்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற சபாரி வாகனங்களின் சாரதிகளால் குறித்த யானை தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பான காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

வாகனங்கள் பயணித்தவர், வழியில் குறுக்கிட்ட யானையை, பட்டாசை வெடிக்கச் செய்து காட்டுக்குள் அனுப்பும் காட்சி இதில் பதிவாகியுள்ளது.

இவ்வாறு யானைகள் குறுக்கிடும் பட்சத்தில் அவை பாதையைக் கடப்பதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்ற நியதி உள்ளது.

இதனை மீறிச் செயற்பட்டமை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மஹேஷியின் மகள் விளக்கமறியலில்

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை...

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...