follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுசுவிஸ் தூதரக முன்னாள் ஊழியருக்கு எதிரான வழக்கு விசாரணை ஓகஸ்ட்டில்

சுவிஸ் தூதரக முன்னாள் ஊழியருக்கு எதிரான வழக்கு விசாரணை ஓகஸ்ட்டில்

Published on

2019 ஆம் ஆண்டு இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டதாகக் கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பொய்யான வாக்குமூலங்களை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுவிஸ் தூதரகத்தின் முன்னாள் உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சாட்சிய விசாரணையை ஆரம்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பல்லல்ல உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று குற்றப்பத்திரிகையின் ஆங்கில மொழிபெயர்ப்பொன்றை குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் திறந்த நீதிமன்றத்தில் கையளித்துள்ளனர்.

வழக்கின் முதலாம் மற்றும் இரண்டாவது சாட்சியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகக் கூறி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பொய்யான வாக்குமூலங்களை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் சுவிஸ் தூதரகப் பணியாளர் மீது கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை கடந்த ஆண்டு தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...